கொரோனா காலத்தில், 11,600 கைதிகள், 3,971 சிறை ஊழியர்களுக்கு யோகா கற்றுக்கொடுத்த ஈஷா !

 

கொரோனா காலத்தில், 11,600 கைதிகள், 3,971 சிறை ஊழியர்களுக்கு யோகா கற்றுக்கொடுத்த ஈஷா !

கொரோனா ஊரடங்கு காலத்தில், தமிழகம் முழுவதும் மத்திய சிறைகளில், கைதிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஈஷா யோகா சார்பில் ஆன்லைன் மூலம் யோகா கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஈஷா யோகா வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், சேலம், கடலூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் மத்திய சிறைகள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிறைகளில் இந்த யோகா வகுப்புகள் நடைபெற்றதாக தெரிவித்துள்ளது.

ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் நடத்தப்பட்ட இந்த யோகா வகுப்புகளில், 8,165 ஆண் கைதிகள், 3,453 பெண் கைதிகள், 3,018 ஆண் ஊழியர்கள், 953 பெண் ஊழியர்கள் உட்பட மொத்தம் 15,589 பங்கேற்று பயன்பெற்றுள்ளனர்.

கொரோனா காலத்தில், 11,600 கைதிகள், 3,971 சிறை ஊழியர்களுக்கு யோகா கற்றுக்கொடுத்த ஈஷா !

நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நுரையீரல் திறனை அதிகரிப்பதற்காக ’சிம்ம க்ரியா’ என்ற பயிற்சியும், உடல் மற்றும் மனதளவில் அமைதியாகவும் சமநிலையாகவும் இருப்பதற்காக ‘யோக நமஸ்காரம்’ மற்றும் ‘ஈஷா க்ரியா’ ஆகிய பயிற்சிகளும் கற்றுக்கொடுக்கப்பட்டன. அரசின் வழிக்காட்டுதல் நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளியுடன் தனித் தனிக் குழுக்களாக வகுப்புகள் நடத்தப்பட்டதாக ஈஷா யோகா கூறியுள்ளது. இந்த பயிற்சிகள் தங்களுக்கு பெரிதும் பயன் அளித்ததாக சிறைத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீலகிரி, திருப்பூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் காவல்துறையினருக்கும், ஈஷா யோகா மையம் சார்பில் கொரோனா காலத்தில் இலவச யோகா வகுப்புகள் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் சிறைச்சாலைகளில் கடந்த 28 ஆண்டுகளாக இலவச யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.