தி.மு.க பொதுக்குழு கூடும் வரை பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்! – ஸ்டாலின் அறிவிப்பு

 

தி.மு.க பொதுக்குழு கூடும் வரை பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்! – ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க பொதுக் குழு கூட்டம் கூடும் வரை தி.மு.க பொருளாளராக துரைமுருகன் தொடர்வார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தி.மு.க பொதுக்குழு கூடும் வரை பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்! – ஸ்டாலின் அறிவிப்பு
தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அந்த பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட உள்ளதால், பொருளாளர் பதவியை ராஜினாமா செய்வதாக துரைமுருகன் அறிவித்தார். அதற்குள்ளாக கொரோனா தொற்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. பொருளாளர் இன்றி செயல்பட முடியாத நிலை தி.மு.க-வுக்கு ஏற்பட்டது.

தி.மு.க பொதுக்குழு கூடும் வரை பொருளாளராக துரைமுருகன் நீடிப்பார்! – ஸ்டாலின் அறிவிப்புஇந்த நிலையில் இன்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “துரைமுருகனின் ராஜினாமா கடிதம் மீதான நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. கொரோனா சூழலை கருத்தில் கொண்டு பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்வு செய்ய முடியாததால் பொதுக்குழு கூடும் வரை தி.மு.க பொருளாளராக துரைமுருகனே நீடிப்பார்” என்று கூறியுள்ளார்.