அனைவரிடத்திலும் பாசம் காட்டக்கூடியவர் துரைமுருகன் – ஓபிஎஸ் பாராட்டு!

 

அனைவரிடத்திலும் பாசம் காட்டக்கூடியவர் துரைமுருகன் – ஓபிஎஸ் பாராட்டு!

சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா காணும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. முதல்வர் ஸ்டாலின், க ட்சிக்கும், ஆட்சிக்கும் துரைமுருகன் உறுதுணையாக இருக்கிறார்; 100 ஆண்டுகால வரலாற்றில் 50 ஆண்டுகாலம் சட்டப்பேரவையை அலங்கரித்துகொண்டுள்ளார் துரைமுருகன் என சட்டப்பேரவையில் பொன்விழா காணும் துரைமுருகனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். இதற்கு தொடர்ந்து பேசிய எதிர்கட்சி உறுப்பினர்களும் துரைமுருகனை பாராட்டி பேசினர்.

அனைவரிடத்திலும் பாசம் காட்டக்கூடியவர் துரைமுருகன் – ஓபிஎஸ் பாராட்டு!

எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓபிஎஸ்

அனைவரிடத்திலும் பாசம் காட்டக்கூடியவர். ஒரே மாதிரியாக நடந்து கொள்பவர். உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர். சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திகழ்பவர் துரைமுருகன்.சூடாக பேசுவார் உடனே அடுத்த வினாடி இனிமையாக பேசும் ஆற்றல் கொண்டவர். நிறைய பாடங்கள் துரைமுருகனிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளேன்; இன்றுபோல் என்றும் உடல்நலத்தில் ஆரோக்கியத்தோடு நூறாண்டுகள் வாழ வேண்டும்.

அனைவரிடத்திலும் பாசம் காட்டக்கூடியவர் துரைமுருகன் – ஓபிஎஸ் பாராட்டு!

பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன்

விசுவசத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் துரைமுருகன்; கலைஞருக்கு மட்டுமல்ல அவரது வழித்தோன்றலுக்கும் விசுவாசமாக இருப்பவர்

பாமக தலைவர் ஜி.கே.மணி

சிந்தனை ஆற்றல், சொல் ஆற்றல், சாதனை ஆற்றல் என்று பல்வேறு திறமைகளை கொண்ட பன்முக ஆற்றல் கொண்டவர் துரைமுருகன். கருணாநிதிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் நிழலாக இருப்பவர் துரைமுருகன்; மருத்துவர் ராமதாஸ் அய்யா மீது மிகுந்த பற்று கொண்டவர்.

அனைவரிடத்திலும் பாசம் காட்டக்கூடியவர் துரைமுருகன் – ஓபிஎஸ் பாராட்டு!

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

“50 ஆண்டுகளாக வற்றாத ஆளுமை துரைமுருகன். தமிழகத்திற்கு தன்னம்பிக்கை தரும் இயக்கமாகவும் திமுக இருக்கிறது. இந்த இயக்கத்தின் வெற்றி வீழ்ச்சிகளிலும் பயணித்தவர். தலைவரை விசுவாசிக்கின்ற தலைவர்கள் அரசியலில் அமைவது கடினம்; அப்படிப்பட்டவர் முதலமைச்சருக்கு கிடைத்து இருக்கிறார்”