குழப்பத்தில் திமுக? பொதுக்குழு, திருச்சி மாநில மாநாடு ஒத்திவைப்பு!

 

குழப்பத்தில் திமுக? பொதுக்குழு, திருச்சி மாநில மாநாடு ஒத்திவைப்பு!

மார்ச் 7ஆம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டமும் திருச்சி மாநில மாநாடும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 7ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குழப்பத்தில் திமுக? பொதுக்குழு, திருச்சி மாநில மாநாடு ஒத்திவைப்பு!

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைமை தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு- புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால் வரும் 7.3.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவிருந்த திமுக பொதுக்குழுக் கூட்டமும்- 14.3.2021 அன்று திருச்சியில் நடைபெறவிருந்த திமுக மாநில மாநாடும் ஒத்திவைக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.