சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்!

 

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்!

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தமிழக சட்டப்பேரவை பொதுக் கணக்கு குழு தலைவராகவும் உள்ளார். அவரது தலைமையிலான குழு திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நேற்று ஆய்வு கூட்டம் நடத்தியது. பொது கணக்கு குழு அலுவல்களை முடித்துக்கொண்டு துரைமுருகன் சென்னை வந்துக்கொண்டிருந்தார். வரும் வழியில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு காய்ச்சல், மயக்கம் ஏற்பட்டதாகவும், மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் திருச்சி மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டார். சிகிச்சைக்கு பின்னர் தொடர்ந்து அவர் காரில் சென்னைக்கு புறப்பட்டார்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்!

சென்னை வந்தவுடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வழக்கமாக சிகிச்சைகள் எடுத்து வரும் போரூர் தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பரிசோதனைகளை நிறைவு செய்த பின் அவர் வீடு திரும்பினார். விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுகவினர் நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தவிருந்த நிலையில் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.