மேகதாது அணை விவகாரம்- டெல்லிக்கு புறப்படும் துரைமுருகன்

 

மேகதாது அணை விவகாரம்- டெல்லிக்கு புறப்படும் துரைமுருகன்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய ஜலசக்திதுறை அமைச்சரை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று சந்திக்கவுள்ளார்.

மேகதாது அணை விவகாரம்- டெல்லிக்கு புறப்படும் துரைமுருகன்

கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்டும் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்றும், இதனால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதலமைச்சர் எடியுரப்பா நேற்று கடிதம் எழுதியிருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மறுப்பு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்த இன்று மத்திய ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று சந்தித்து வலியுறுத்தவுள்ளார். கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் எடுத்துரைக்கவுள்ளார். அதேபோல் கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மார்கண்டேய பகுதியில் அணை கட்டியுள்ள விவகாரம் குறித்தும், இந்த சந்திப்பின் போது எடுத்துரைக்கவுள்ளார். இந்த சந்திப்பிற்காக தமிழக நீர்பாசத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் துரைமுருகனுடன் டெல்லி செல்கிறார்.