காரில் சென்றுகொண்டிருந்தபோது திடீர் காய்ச்சல்… மருத்துவமனையில் துரைமுருகன்!

 

காரில் சென்றுகொண்டிருந்தபோது திடீர் காய்ச்சல்… மருத்துவமனையில் துரைமுருகன்!

தி.மு.க பொதுச்செயலாளரும் காட்பாடி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவுமான துரைமுருகன், மேல்விஷாரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காய்ச்சல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். பள்ளேரி கொண்டகுப்பம், மருதபாக்கம் ஆகிய பகுதிகளில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பின் சென்னை செல்லும் போது லேசான காய்ச்சல் இருந்ததால் வழியில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார். அவருக்கு உடல் வெப்பநிலை 102 டிகிரி செல்சியஸ் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரில் சென்றுகொண்டிருந்தபோது திடீர் காய்ச்சல்… மருத்துவமனையில் துரைமுருகன்!

இதனைதொடர்ந்து அவருக்கு சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக துரைமுருகனுக்கு தற்போதைக்கு ஒரு ஊசி போடப்பட்டது. உடல் வெப்ப நிலை தற்போது குறைந்துள்ளது. முன்னதாக பல்ஸ், பிபி, ஈசிஜி போன்ற பரிசோதனைகள் மேற்க்கொள்ளப்பட்டதில் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2 வாரங்களாக பல்வேறு கிராம சபை கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியதால் துரைமுருகனுக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. மாலை 6.00 வரை மருத்துவமனையிலேயே ஓய்வெடுத்த துரைமுருகன், தற்போது உடல் நிலை சீரானதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கடந்த 17-ம் தேதி திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொதுக் கணக்கு குழு ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேலூர் மாவட்டம் திரும்பும் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதில் அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.