உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் திமுக; துரைமுருகனின் முக்கிய அறிவிப்பு!

 

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் திமுக; துரைமுருகனின் முக்கிய அறிவிப்பு!

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசிக்க திமுக மாவட்ட செயலாளர்கள் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் வருகிற 26.6.2021 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அது போது மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் திமுக; துரைமுருகனின் முக்கிய அறிவிப்பு!

விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சி, நெல்லை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கும் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் படி, அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. ஏற்கனவே, உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் திமுக; துரைமுருகனின் முக்கிய அறிவிப்பு!