திமுக பொது செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

 

திமுக பொது செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை மின்னல் வேகம் எடுத்துள்ளதால், சினிமா பிரபலங்களும், அரசியல்வாதிகளும், விளையாட்டு வீரர்களும் அதிகமாக தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகைகள் ராதிகாவுக்கும், நக்மாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. தேர்தலில் களம்கண்ட வேட்பாளர்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திமுக பொது செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் திமுக பொது செயலாளர் துரைமுருகனுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் கொரோனா பரவல் பாதிப்பு அதிகமானதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைபடி, அப்போலோ மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.