இதெல்லாம் நல்லதல்ல… எச்சரிக்கும் துரைமுருகன்

 

இதெல்லாம் நல்லதல்ல… எச்சரிக்கும் துரைமுருகன்

தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமான காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகா முயற்சித்துவருகிறது. ஆனால் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ள தமிழக அரசு, மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என அனைத்துக்கட்சியை கூட்டி திர்மானத்தை போட்டது. இதனிடையே கர்நாடகாவில் அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் சூளூரைத்துள்ளார்.

இதெல்லாம் நல்லதல்ல… எச்சரிக்கும் துரைமுருகன்

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், “மேகதாதுவில் அணையைக் கட்டுவதற்கு யாரையும் கேட்கத் தேவையில்லை என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜா பொண்மைய்யா ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டிற்கு எந்தெந்த இடத்திலிருந்து எவ்வளவு நீரைத் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக ஆணையிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கும் நீரை இடைமறித்து மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று சொல்வது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே புறக்கணிப்பது போன்றது.

இதெல்லாம் நல்லதல்ல… எச்சரிக்கும் துரைமுருகன்

மேலும், மத்திய அரசின் தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலும் ஒரு மாநிலத்திற்குள் ஓடுகிற நீர் அந்த மாநிலத்திற்கே என்று சொந்தம் கொண்டாட முடியாது, அது தேசிய சொத்து என்று தீர்ப்புரைத்திருப்பதை கர்நாடக மாநில அமைச்சர் அறிந்திருப்பார் என்றே கருதுகிறேன். இவ்வளவையும் மீறி அணையைக் கட்டுவோம் என்று சொல்வது, நடுவன் மன்ற தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் நாங்கள் மதிக்கமாட்டோம் என்று சொல்வது போல் தெரிகிறது.

இது ஒரு ஜனநாயக நாடு. இத்தகைய போக்கு ஒரு மாநிலத்திற்குள் வளர்வதை மத்திய அரசு பார்த்துக் கொண்டிருப்பதும் நல்லதல்ல. அண்டை மாநிலத்தின் உறவிற்கும் இது உகந்ததல்ல. மேகதாதுவில் அணைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் சொல்வதைப் போல், எந்த நிலையிலும் சட்டப்படி அதைத் தடுத்தே தீருவோம் என்று சொல்வதற்கு எங்களுக்கு உரிமை உண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.