ரத்தக்கறையை மறைக்க சாணம் தெளிப்பு – பெற்ற தாயே மகனின் தலையில் கல்லைப்போட்டு கொன்றது அம்பலம்

 

ரத்தக்கறையை மறைக்க சாணம் தெளிப்பு – பெற்ற தாயே மகனின் தலையில் கல்லைப்போட்டு கொன்றது அம்பலம்

வீட்டுத் திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த கட்டிட தொழிலாளியின் தலையில் மர்ம நபர்கள் பாறாங்கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர் என்று குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பெற்ற தாயே மகனின் தலையில் கல்லை போட்டு கொன்றுவிட்டு மர்ம நபர்கள் கொன்றுவிட்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இந்த அதிர்ச்சி சம்பவம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியங்குப்பம் ரசாக் பேட்டையில் நடந்துள்ளது.

ரத்தக்கறையை மறைக்க சாணம் தெளிப்பு – பெற்ற தாயே மகனின் தலையில் கல்லைப்போட்டு கொன்றது அம்பலம்

பெரியங்குப்பம் ரசாக் பேட்டையில் ராஜேஸ்வரி- புகழேந்தி தம்பதிக்கு மூன்று ஆண் பிள்ளைகள். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே மனைவி ராஜேஸ்வரியை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். புகழேந்தி மூன்று ஆண் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

ராஜேஸ்வரியின் இரண்டாவது மகன் கட்டிடத் தொழிலாளியான சிவக்குமாருக்கு திருமணமாகி கவுரி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

சிவகுமார் சரியாக வேலைக்கு செல்லாமல் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மனைவியும் குழந்தைகளும் மூன்றாண்டுகள் இவரை விட்டு பிரிந்து வசித்து வந்துள்ளனர். ராஜேஸ்வரி சமாதானம் பேசி அழைத்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் நேற்று இரவு திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த தனது மகனை மர்மநபர்கள் யாரோ பாறாங்கல்லை தலையில் போட்டுக் கொன்று விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார் ராஜேஸ்வரி. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி நேரில் சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் வீட்டைச் சுற்றியே மூன்று முறை சுற்றி வந்து தேசிய நெடுஞ்சாலை வரை ஓடிச்சென்று நின்று விட்டது.

ரத்தக்கறையை மறைக்க சாணம் தெளிப்பு – பெற்ற தாயே மகனின் தலையில் கல்லைப்போட்டு கொன்றது அம்பலம்

இதனால் போலீசாருக்கு வீட்டினரும் மீது சந்தேகம் வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கொலை நடந்த இடத்தில் கிடந்த கல் மீது சாணம் கரைத்து ஊற்ற பட்டிருந்தது. இதனால் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் தான் அல்லது வீட்டினரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதை அடுத்து ராஜேஷ்வரியையும் கவுரியையும் போலீசார் துருவி துருவி விசாரித்ததில், தன் மகனை தலையில் கல்லைப் போட்டுக் கொன்று விட்டதை ராஜேஸ்வரி ஒப்புக்கொண்டார்.

அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து மகன் நிம்மதி இல்லாமல் செய்து வந்தார். எங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விடுவேன் என்றும் மிரட்டி வந்தார். இதனால் நாங்கள் ஒவ்வொரு நாளும் பயந்து கொண்டே வாழ்ந்து வந்தோம். இதனால் அவன் மீது நாங்கள் கடும் ஆத்திரத்தில் இருந்தோம். நேற்றைக்கும் அதிக மதுபோதையில் வந்து வீட்டு திண்ணையில் உறங்கிக்கொண்டிருந்தான். இவன் இதற்குமேலும் இருந்து யாருக்கும் பிரயோசனமில்லை. எல்லோருக்கும் தொந்தரவு தான் என்று நினைத்தேன். தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டேன். ரத்தக்கரை படிந்ததை மறைக்கத்தான் சாணத்தை ஊற்றி வைத்தோம் என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெற்ற தாயே மகனை தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.