“தலையை வெட்டி ,வேறு உடலுடன் ஒட்டி …”-முன்னாள் காதலனால் காதலிக்கு நேர்ந்த நிலை .

 

“தலையை வெட்டி ,வேறு உடலுடன் ஒட்டி …”-முன்னாள் காதலனால் காதலிக்கு நேர்ந்த நிலை .


ஒரு பெண்ணின் முன்னாள் காதலன், அந்த காதலியை பழி வாங்க அவரின் மார்பிங் செய்த போட்டோக்களை ஊடகத்தில் வெளியிட்டதால் கைது செய்யப்பட்டார்.

“தலையை வெட்டி ,வேறு உடலுடன் ஒட்டி …”-முன்னாள் காதலனால் காதலிக்கு நேர்ந்த நிலை .


குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரியும் 26 வயது இளைஞன் பரத் நை .இவர் 32 வயதான ஒரு ஆட்டோமொபைல் நிறுவன அலுவலகத்தில் டெலிமார்க்கெட்டிங் நிர்வாகியாக பணியாற்றும் ஒரு பெண்ணோடு உறவில் இருந்தார் .கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் காதலித்து உல்லாசமாக இருந்துள்ளார்கள் ,இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அவரின் காதலனின் உறவில் விரிசல் ஏற்பட்டது .
அதனால் அந்த பெண் அவரை விட்டு விலக தொடங்கினார் .ஆனால் அந்த வாலிபர் அந்த பெண்ணின் உறவை கைவிட மறுத்தார் .இதனால் அந்த பெண்ணுக்கும் அவருக்கும் தகராறு முற்றி இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை முறிந்து போனது .அதனால் பாதிக்கப்பட்ட அந்த வாலிபர் அந்த பெண்ணை பழி வாங்க நினைத்தார். அதனால் அந்த பெண்ணின் பெயரில் ஒரு போலியாக சமூக ஊடகத்தில் ஒரு கணக்கை உருவாக்கினார். அதில் அந்த பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண போட்டோக்களை பதிவேற்றினார்.பிறகு அந்த போட்டோவை பார்த்த அந்த பெண்ணின் நண்பர்கள் பலர் அவரிடம் இது பற்றி கூறினார்கள். அதனால் கோபடைந்த அந்த பெண் போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து ,சைபர் க்ரைம் போலீசின் உதவியுடன் விசாரித்த போது இந்த மார்பிங் வேலையை அந்த பெண்ணின் முன்னாள் காதலன் பரத் செய்தது கன்டுபிடிக்கப்பட்டது .பின்னர் போலிசார் அவரை பிடித்து வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தார்கள் .

“தலையை வெட்டி ,வேறு உடலுடன் ஒட்டி …”-முன்னாள் காதலனால் காதலிக்கு நேர்ந்த நிலை .