கான்பூரில் எட்டு போலீசை சுட்ட துபேயின் கூட்டாளி கைது -பல திடுக்கிடும் ரகசியங்கள் வெளியீடு ..

 

கான்பூரில் எட்டு போலீசை சுட்ட துபேயின் கூட்டாளி கைது -பல திடுக்கிடும் ரகசியங்கள் வெளியீடு ..

உ.பி .மாநிலம் கான்பூரில் இரண்டு நாளைக்கு முன்பு ஒரு டிஎஸ்பி உள்பட எட்டு போலீஸ்காரர்களை சுட்டு கொன்றுவிட்டு, தப்பி ஓடிய ரௌடி துபேயின் கூட்டாளியான தயா ஷங்கர் அக்னிஹோத்ரி, இன்று கல்யாண் பூரில் அதிகாலை 4.40மணிக்கு துப்பாக்கியால் அவரின் காலில் சுடப்பட்ட பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்,.அவர் வசம் இருந்த நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கான்பூரில் எட்டு போலீசை சுட்ட துபேயின் கூட்டாளி கைது -பல திடுக்கிடும் ரகசியங்கள் வெளியீடு ..
கைது செய்யப்பட்ட அக்னிகோத்ரி மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் போலீசுக்கு கிடைத்துள்ளன .அக்னிகோத்ரி வெளியிட்ட தகவலில் ,வியாழக்கிழமை இரவே உள்ளூர் போலிஸிலிருக்கும் துபேயின் உளவாளிகள் சிலர் வெள்ளிக்கிழமை காலை துபேவை கைது செய்ய போலீஸ் வரும் தகவலை அவரிடம் கூறியுள்ளனர் . இதனால் உஷாரான துபேவும் அவரின் கூட்டாளிகளும் கைது செய்ய வரும் போலீசாரை கொல்ல வெடிபொருட்களை சேகரிக்க திட்டமிட்டனர் .
வெள்ளிக்கிழமை நடந்த மோதலில் கொல்லப்பட்ட துபேவின் இரண்டு கூட்டாளிகளின் பிரேத பரிசோதனையில் போலிஸாரிடமிருந்தே பறிக்கப்பட்ட ஆயுதங்கள் மூலம் போலீசாரை தாக்கிய ரகசியம் வெளியாகியுள்ளது .