வீக்கானவர்களை தாக்க துடிக்கும் வைரஸிடமிருந்து தேக்கு போல் காக்கும் இந்த பழங்கள் .

 

வீக்கானவர்களை தாக்க துடிக்கும் வைரஸிடமிருந்து தேக்கு போல் காக்கும் இந்த பழங்கள் .

பழங்கள் என்றாலே சத்து நிறைந்தவையாக தான் இருக்கும். அதிலும் உலர் பழங்களில் சத்து கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அனைத்து பழங்களையும் இதுப்போன்று உலர வைத்து சிறிது நாட்கள் கழித்து சாப்பிட இயலாது.

குறிப்பிட்ட சில பழங்களை மட்டுமே இது போன்று சாப்பிட இயலும். அதில் நெல்லி, அத்தி, திராட்சை, பேரீச்சை போன்றவை மிக முக்கியமானவையாகும். பழங்களை உலர வைத்து உண்ணும் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உணவுப்பழக்கத்தில் இருந்து வருகிறது.

உலர் பழங்கள் நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், உடலுக்கேற்ற கனிமங்கள், நார்சத்து ஆகியவற்றை வழங்குகின்றன.

பழங்களில் உள்ளது போன்றே உலர் பழங்களிலும் சத்துக்கள் உள்ளன. ஏனெனில் உலர் பழங்கள் பழங்களில் இருந்து வந்ததே ஆகும். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவியாக இருக்கும். குறிப்பாக வேலை செய்யும் போதோ அல்லது ஸ்நாக்ஸ் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போதோ, இத்தகைய உலர் பழங்களை சாப்பிட்டால், எனர்ஜி கிடைக்கும்.

வீக்கானவர்களை தாக்க துடிக்கும் வைரஸிடமிருந்து தேக்கு போல் காக்கும் இந்த பழங்கள் .

உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை வற்றச் செய்து உலர் பழங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். உலர்த்துவதன் மூலம் ஒரு பருவ காலத்தின் பழங்களை மற்றொரு பருவ காலத்தில் உண்ண முடிகிறது. உலர் பழங்களின் சுவையும், மணமும் வெகு நாட்களுக்கு இருக்கும்.

உலர் பழங்களுக்கு கலோரிகள் அதிகம். மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தர விட்டமின்கள், மினரல்கள் இவற்றில் நிறைய உள்ளன. உலர் பழங்கள் வெகு எளிதில் செரிமானமாகக் கூடியவை. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. பலவீனமானவர்கள் உலர் பழங்கள் உண்டால் விரைவில் இயல்பான ஆரோக்கியத்தை அடையலாம்.

உலர் பழங்களில் உள்ள இனிப்பு தனித்துவமான சுவை கொண்டது. நாவிற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது. உலர் பழங்களை பழக்கமாகக் கொண்டால் உடல் சக்தி அதிகரிக்கும். உலர் பழங்கள் தோல் சுருக்கங்களை நீக்கிச் சருமத்தை செளந்தர்யமாக்கக்கூடியவை. மலச்சிக்கலை போக்க வல்லது. அதுமட்டுமல்ல நினைவாற்றலையும் பெருக்கும். இதயத்திற்கும் நல்லது. உலர்ந்த திராட்சை புரதச் சத்தும் நிறைந்தது. வேர்க்கடலையில் நார்ச் சத்தும் பேரீச்சம்பழத்தில் தாதுச் சத்தும் நிறைந்துள்ளன. இவ்வளவு சத்துள்ள உலர் பழங்களை அன்றாடம் உண்டு ஆரோக்கியம் பெறுவோம்.

இந்தியப் பெண்களிடையே ரத்தச்சோகை அதிகமாகக் காணப்படுகிறது. உலர்ந்த பேரீச்சை இரும்பைப்போன்ற சக்திவாய்ந்தது. இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

உலர்ந்த பழங்களில் ஊட்டசத்து அதிகம் இருந்தாலும் கலோரிகளின் அளவும் அதிகமாக இருப்பதால் இதனை அளவுடன் சாப்பிட வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது உலர்ந்த பழங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டாக இருக்கும்.

உலர் திராட்சைகள் நார்ச்சத்து நிறைந்தவை. ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்தவை. கலோரி நிறைந்த இவற்றை உணவுக்குமுன் சாப்பிடும்போது, வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. அதனால் கலோரி நுகர்வு குறைகிறது. விளையாட்டு வீரர்கள் போட்டிகளின்போது தங்கள் செயல்திறனை அதிகரிக்கத் திராட்சையை உண்ணலாம்.

நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு ஆகியவை நிறைந்தது. மெனோபாஸ் அடைந்த பெண்களுக்கு எலும்பு பலவீனத்தைத் தடுக்கக்கூடியது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு சேர்க்காத உலர்ந்த நெல்லிக்கனி நன்மை தரும்.