“அட! என் பக்கத்துல படுத்திருந்தது என் பொண்டாட்டியா ,இது தெரியாம..” -ஒரு குடிகார கணவர் பண்ண வேலை.

 

“அட! என் பக்கத்துல படுத்திருந்தது என் பொண்டாட்டியா ,இது தெரியாம..” -ஒரு குடிகார கணவர் பண்ண வேலை.


ஒரு கணவன் குடிபோதையில் தன் பக்கத்தில் படுத்திருந்தது மனைவி என்று அறியாமல், அவரை கொன்று விட்டு அந்த பிணத்தின் அருகிலேயே படுத்து உறங்கிய கொடுமை நடந்துள்ளது.
வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் உள்ள சாண்ட் நகரில் வசிக்கும் 32 வயதான ராஜ் குமார் என்ற கணவர் 30 வயதான ஹஷிகா என்ற பெண்ணோடு வாழ்ந்து வந்தார் .ராஜ்குமார் ஒரு புகைப்பட கலைஞர் என்பதால் ,இந்த கொரானா ஊரடங்கால் அவருக்கு வேலையில்லாமல் போனது .அதனால் அவர் தன்னுடைய குடியிருப்பை தன்னுடைய மாமியார் வீட்டுக்கு மாற்றினார் .அங்கு அந்த பகுதியில் ராஜ்குமார் பிளம்பிங் வேலை செய்து வந்தார் ,அவரின் மனைவி ஹாஷிகா ஒரு மளிகை கடை நடத்தி வந்தார் .
இந்நிலையில் அந்த ராஜ்குமாருக்கு குடிப்பழக்கம் அதிகமானது .இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்தது .அதன் காரணமாக இருவரும் அந்த பகுதியில் தகராறு செய்து கொண்டு வாழ்ந்தார்கள் .மேலும் அவருக்கு சரியான வருமானமில்லாததும் இந்த சண்டைக்கு காரணமாக இருந்தது .
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில், இருவரும் இரவு உணவுக்குப் பிறகு தங்கள் அறைக்குச் சென்றனர். இரவு 11.30 மணியளவில், குமார் அதிக அளவில் குடிபோதையில் இருந்ததால் இருவரும் மீண்டும் சண்டையிட்டனர்.அதன் பிறகு குமார் அவரின் மனைவியை குடிபோதையில் கொன்று விட்டு ,பிறகு அந்த பிணத்தின் பக்கத்திலேயே படுத்தும் தூங்கி விட்டார் .மறுநாள் காலையில் குடி போதை தெளிந்து பார்த்த குமார் தான் பக்கத்தில் படுத்திருந்த மனைவியை கொன்றதையறிந்து அதிர்ச்சியடைந்தார் .பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் .பின்னர் போலீசார் இந்த கொலை பற்றி துப்பு துலக்கி அந்த பெண்ணின் கணவரை கைது செய்தார்கள்.

“அட! என் பக்கத்துல படுத்திருந்தது என் பொண்டாட்டியா ,இது தெரியாம..” -ஒரு குடிகார கணவர் பண்ண வேலை.