போதைப் பொருள் விவகாரம்: பிரபல தமிழ் நடிகையிடம் விசாரணை நடத்த திட்டம்!!

 

போதைப் பொருள் விவகாரம்: பிரபல தமிழ் நடிகையிடம் விசாரணை நடத்த திட்டம்!!

போதைப்பொருள் விவகாரம் இந்தியாவை உலுக்கி எடுத்து வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், முக்கிய குற்றவாளியாக சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி குற்றஞ்சாட்டப்பட்டார். அண்மையில் ரியாவை மும்பையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து ரியா சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் ரியா தரப்பில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

😘 - Rakul Preet Singh The Smiling Beauty | Facebook

பின்னர் அவர் மீண்டும் போலீசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது, போதைப்பொருள் வாங்கியது தொடர்பாக ரியாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அச்சமயம் ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட் நடிகை சாரா அலிகான் உள்ளிட்ட பலருக்கு போதை பொருள் சப்ளை செய்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக ரியா கோர்த்து விட்டார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திதால், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே போல கன்னட திரையுலகில் நடிகை சஞ்சனா கல்ராணி, டிவி நடிகை அனிகா கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலிகான்,மற்றும் ஷ்ரதா கபூர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதில் தமிழ் பட நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அடுத்த மூன்று நாட்களில் நடிகைகளும் நேரில் ஆஜராக வேண்டும் என மும்பை பொருள் தடுப்பு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.