டிக்டாக்கில் வீழ்த்தினார்… கர்ப்பமாக்கிய வாலிபர்… பிரித்த மாமனார்… தவிக்கும் இளம்பெண்

 

டிக்டாக்கில் வீழ்த்தினார்… கர்ப்பமாக்கிய வாலிபர்… பிரித்த மாமனார்… தவிக்கும் இளம்பெண்

டிக்டாக்கில் இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த வாலிபர் தலைமறைவாக விட்டார். மாமனார் பேச்சை நம்பி கணவரை பிரிந்த கர்ப்பிணி பெண் தற்போது தவித்து வருகிறார்.

மதுரை மாவட்டம், மேலூர் அடுத்த தற்காகுடியை சேர்ந்த பாண்டிக்குமார் என்பவரின் மகன் உதயகுமார். டிக்டாக், முகநூலில் தனது பொழுதை கழித்து வந்ததோடு, அழகான பெண்களை குறிவைத்துள்ளார். அப்போது, டிக்டாக் மூலம் அழகு நிலையத்தில் பணியாற்றி வந்த சத்யா என்பவரை காதலில் வீழ்த்தியுள்ளார். இருவரும் ஒன்றாக சேர்ந்து தனிமையில் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் சத்யாவுக்கு தாலி கட்டிய உதயகுமார், தனி குடித்தனமே நடத்தி வந்தார். ஒரு வருடமாக வாழ்க்கை நடத்திய உதயகுமாரால் சத்யா கர்ப்பமானார். இந்த நிலையில் மகனின் காதல் மனைவியை பிரிக்க திட்டமிட்டார் மாமனார் பாண்டிக்குமார். சத்யாவை தொடர்பு கொண்ட அவர், “நீங்கள் இருவரும் பிரிந்தால் 2 மாதத்தில் ஜாம் ஜாம் என்று திருமணம் செய்து வைக்கிறேன்” என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய சத்யா, திருமணம் முறிவு பத்திரம் ஒன்றை எழுதி கொடுத்ததோடு, கணவனை அவரது தந்தையோடு அனுப்பிவைத்துவிட்டார்.

இந்த நிலையில் சத்யாவுக்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட பாண்டிக்குமார், தனது மகனுக்கு வேறு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். 60 பவுன் நகைகள், 30 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக பெற்று தனது மகனுக்கு உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து வைக்க தடபுடல் ஏற்பாடு செய்தார் பாண்டிக்குமார். இந்த சூழ்நிலையில், கணவன் உதயகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார் சத்யா. ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதையடுத்து, காவல்நிலையத்தில் முறையிட்டுள்ளார் சத்யா. இதைத் தொடர்ந்து பாண்டிக்குமாரை வரவழைத்து விசாரணை நடத்திய காவலர்களிடம், சத்யா தனது மகளுக்கு அக்காள் உறவு முறை என்றும் எனது மகனுடன் எந்த தொடர்பும் கிடையாது என்றும் ஏற்கெனவே திருமண முறிவு பத்திரம் ஒன்றை சத்யா தன்னிடம் எழுதி கொடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். பாண்டிக்குமாரின் இந்த செயலால் மனவேதனை அடைந்த சத்யா, தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். “எனது கணவனை மீண்டும் தன்னிடம் அழைத்து வரவேண்டும் என்றும் இல்லையென்றால் நான் மரணம் அடைந்து ஆத்மாவாக வந்து விரட்டுவேன்” என்று சத்யா மிரட்டியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்த சத்யா, மாமனார் பாண்டிக்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு, நீங்கள் கொடுத்த வாக்குறுதி படி எனது கணவரை தன்னிடம் சேர்த்து வையுங்கள் என்று கதறியுள்ளார். ஆனால், பாண்டிக்குமாரோ, மகனை ஹீரோ போல வளர்த்திருக்கிறேன். திடீரென்று டிக்டாக்கில் இருந்து வந்து மகனை கொத்திக்கிட்டு போய்ட்டா விட்டுக் கொடுக்க முடியுமா என டயலாக் பேசி வருகிறார்.

காதல் கணவரை நினைத்து தவித்து வரும் காதலி சத்யாவுக்கு காவல்துறையினர் நீதி செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.