“வண்டி நிறைய பணம் ,அலை பாய்ந்த மனம்” -நாலு கோடி ஏடிஎம் பணத்துடன் மாயமான வேன் ட்ரைவர்

 

“வண்டி நிறைய பணம் ,அலை பாய்ந்த மனம்” -நாலு கோடி ஏடிஎம் பணத்துடன் மாயமான வேன் ட்ரைவர்

ஒரு ஏடிஎம் க்கு 4.25 கோடி ரூபாய் பணம் ஏற்றிவந்த லாரியுடன் அந்த ட்ரைவர் மாயமானதால் அந்த வங்கி அதிகாரிகள் போலீசின் உதவியால் அவரை தேடி வருகிறார்கள்.


மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகே விராரின் பொலின்ஜ் பகுதியில் கோட்டக் மஹிந்திரா வங்கி ஏடிஎம் உள்ளது .இந்த ஏடிஎம் க்கு தினமும் ஒரு டிரைவர் பல கோடி பணத்துடன், அங்கு நிரப்ப ஊழியர்களை கூட்டிக்கொண்டு வருவார் .அப்போதெல்லாம் அந்த டிரைவருக்கு எப்படியாவது இந்த பணத்தை நாம் அடைய வேண்டும்,உல்லாசமாக வாழ வேண்டும் என்று மனதில் ஆசையை வளர்த்துக்கொண்டு வண்டி ஓட்டியுள்ளார் .அதனால் அதற்கான சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார் .

அதன்படி கடந்த வியாழக்கிழமையன்று அந்த வங்கியின் ஏடிஎம் க்கு பணம் நிரப்ப 4 .25 கோடி ரூபாய் பணத்துடனும் ,வங்கி ஊழியர்களுடனும் அந்த வேன் புறப்பட்டது .அந்த வண்டியை அந்த வங்கியின் டிரைவர் ஓட்டி வந்தார் .அப்போது அந்த வண்டி அந்த ஏடிஎம் ல் நின்றதும் ,அதன் ஊழியர்கள் ஏடிஎம் க்குள் இறங்கி போனார்கள் .அந்த நேரத்தில் அந்த டிரைவர் அந்த 4.25 கோடி ரூபாய் பணத்துடன் வண்டியை எடுத்துக்கொண்டு எங்கோ போய் விட்டார் .பின்னர் ஏடிஎம் க்குள்ளிருந்து வெளியே வந்த வங்கி ஊழியர்கள் பணத்துடன் நின்றிருந்த வண்டியை காணாததால் திடுக்கிட்டனர் .அந்த வண்டியை ஓட்டி வந்த டிரைவருக்கு போன் செய்த போது அது ஸ்விச் ஆப் செய்யப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியுற்றனர் .அதனால் அவர்கள் தங்களின் வங்கியின் உயரதிகாரிகளிடம் இந்த விஷயத்தை கூறினார்கள் .அவர்கள் அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் கூறினார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து 4.25 கோடி ரூபாய் பணத்துடன் மாயமான ஓட்டுனரையும் ,வேனையும் தேடி வருகிறார்கள் .

“வண்டி நிறைய பணம் ,அலை பாய்ந்த மனம்” -நாலு கோடி ஏடிஎம் பணத்துடன் மாயமான வேன் ட்ரைவர்