தேனி அருகே ஓடும் வேனில் நெஞ்சுவலியால் ஓட்டுநர் பலி!

 

தேனி அருகே ஓடும் வேனில் நெஞ்சுவலியால் ஓட்டுநர் பலி!

தேனி

தேனி அருகே சரக்கு வாகனத்தில் வாழைக்காய் ஏற்றிச்சென்ற மதுரையை சேர்ந்த ஓட்டுநர், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.

மதுரை மாநகர் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் காசிம். சரக்கு வேன் ஓட்டுநர். இவர் இன்று காலை தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ள அப்பிபட்டி பகுதியில் தோட்டத்தில் வாழைக்காய் ஏற்றிக் கொண்டு, மதுரை மாவட்டம் மேலூருக்கு வாகனத்தில் புறப்பட்டு சென்றார். அப்பிப்பட்டி காளியம்மன் கோவில் அருகே சென்றபோது, காசிம்மிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

தேனி அருகே ஓடும் வேனில் நெஞ்சுவலியால் ஓட்டுநர் பலி!

இதனால் உடனடியாக வாகனத்தை சாலையில் நிறுத்திய அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள், சின்னமனூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஓட்டுநர் காசிமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து காசிமின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த சின்னமனூர் போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் வேனில் ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.