நாமக்கல்லில் லாரி மோதி ஓட்டுநர் பலி!

 

நாமக்கல்லில் லாரி மோதி ஓட்டுநர் பலி!

நாமக்கல்

நாமக்கலில் பள்ளத்தில் சிக்கிய லாரியை மீட்க முயன்றபோது, லாரியின் சக்கரம் ஏறியதில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் சாவடித்தெருவை சேர்ந்தவர் முத்துசாமி(60). லாரி ஓட்டுநர். இவர் நேற்று முன்தினம் நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து என்.புதுப்பட்டிக்கு சரக்கு ஏற்றிச் சென்று விட்டு, ரயில் நிலையத்திற்கு திரும்பி கொண்டிருந்தார். ரயில்வே கூட்ஸ்ஷெட் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக லாரியின் டயர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.

நாமக்கல்லில் லாரி மோதி ஓட்டுநர் பலி!

இதனால், லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய முத்துசாமி, பின்பக்க சக்கரத்தில் கல்லை வைத்து அதனை வெளியேற்ற முயற்சித்தார். அப்போது, எதிர்பாராத விதமாக லாரி பின்னோக்கி நகர்ந்ததில், முத்துசாமியின் மீது சக்கரம் ஏறியது. இதில் அவர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.