எடப்பாடி அருகே இடி தாக்கி, இளைஞர் பலி!
சேலம்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இடி தாக்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள வெள்ளாண்டி வலசு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மகன் மோகன்பாபு(25). மினிவேன் ஓட்டுநர். இவர் நேற்றிரவு கிராமத்தின் ஒதுக்குப் புறமான பகுதியில் நண்பர்களுடன் நின்று செல்போன் பேசி கொண்டிருந்து உள்ளார்.
அப்போது, திடீரென அந்த பகுதியில் மழை பெய்ததால், மோகன்பாபு அங்குள்ள மரத்தின் அடியில் நின்று செல்போன் பேசி கொண்டிருந்து உள்ளார். அப்போது, திடீரென மரத்தின் மீது இடி விழுந்ததில் அதன் கீழே நின்றிருந்த மோகன்பாபுவின் மீதும் இடி தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அவரது தந்தை கதிர்வேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.