நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த குடிநீரை குடித்தால் போதும் – அமைச்சர் ஜெயக்குமார்

 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த குடிநீரை குடித்தால் போதும் – அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். சென்னையிலேயே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதியான ராயபுரத்தில் 1, 715 பேரும் அந்த மண்டலத்தினுள் வரும் துறைமுகம் தொகுதியில் 1,456 பேரும், சேப்பாக்கத்தின் 2 வார்டுகளில் 406 பேரும் எழும்பூரில் 630 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த குடிநீரை குடித்தால் போதும் – அமைச்சர் ஜெயக்குமார்

அங்கு ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் இடத்திற்கு ஒருவர் 2 முறை சென்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கூறினார். தொடர்ந்து, கொரோனா நோயில் இருந்து மீள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர், சீரக குடிநீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம் என்று கூறினார். மேலும், ஒரு டம்ளர் நீரில் ஒரு பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள்தூள், உப்பு தலா ஒரு சிட்டிகை போட்டு காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும் கூறினார்.