கம்பவுண்டர்கள் டாக்டர்களை விட சிறந்தவர்கள் என்ற சிவ சேனா தலைவர்…. பதிலடி கொடுத்த இளம் மருத்துவர்

 

கம்பவுண்டர்கள் டாக்டர்களை விட சிறந்தவர்கள் என்ற சிவ சேனா தலைவர்…. பதிலடி கொடுத்த இளம் மருத்துவர்

சிவ சேனாவின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் அண்மையில் பேட்டி ஒன்றில், மருத்துவர்களுக்கு எதுவும் தெரியாது…கம்பவுண்டர்கள் சிறந்தவர்கள்.. நான் எப்போதும் கம்பவுண்டரிடமிருந்துதான் மருந்து எடுத்துக்கொள்வேன், மருத்துவரிடமிருந்து ஒருபோதும் இல்லை. உலக சுகாதார அமைப்பு ஒரு பயனற்ற அமைப்பு. உலக சுகாதார அமைப்பால்தான் கோவிட்-19 தொற்றுநோய் நிகழ்ந்தது என தெரிவித்து இருந்தார்.

கம்பவுண்டர்கள் டாக்டர்களை விட சிறந்தவர்கள் என்ற சிவ சேனா தலைவர்…. பதிலடி கொடுத்த இளம் மருத்துவர்

சிவ சேனா தலைவரின் இந்த பொறுப்பற்ற பேச்சுக்கு அவுரங்காபாத்தை சேர்ந்த மருத்துவர் அமோல் அன்னடேட் சரியான பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கடந்த 15ம் தேதியன்று யூ டியூப்பில் அமோல் அன்னடேட் வெளியிட்ட வீடியோவை நேற்று முன்தினம் வரை 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இளம் மருத்துவரான அமோல் அன்னடேட் அதில் கூறியிருப்பதாவது: கோவிட்-19ஆல் பூச்சிகள் போல் மக்கள் இறந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இது போன்ற கருத்துக்கள் தேவையற்றது.

கம்பவுண்டர்கள் டாக்டர்களை விட சிறந்தவர்கள் என்ற சிவ சேனா தலைவர்…. பதிலடி கொடுத்த இளம் மருத்துவர்

ஒவ்வொரு நாளும் மருத்துவர்களுக்கு உதவுவதால் நான் கம்பவுண்டர்களை மதிக்கிறேன். கம்பவுண்டரால் ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய முடியுமா? ( சஞ்சய் ரவுத் சென்ற ஆண்டுதான் மும்பை மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்து இருந்தார்) இப்பம் அனைத்து மருத்துவர்களையும் சஸ்பெண்ட் செய்து விட்டு, கோவிட்-19 வார்டுகளில் அரசியல்வாதிகளை அமர்த்துங்க. நான் உங்களிடமிருந்து மன்னிப்பை எதிர்பார்க்கவில்லை, இருப்பினும், நீங்கள் எந்த மருத்துவரையும் ஒருபோதும் கலந்தாலோசிக்க மாட்டீர்கள் என்று அறிவிக்க வேண்டும். ஏனெனில் உங்கள் எண்ணப்படி எப்படியும் மருத்துவர்கள் எதுவும் புரிந்து கொள்ளமாட்டார்கள். இவ்வாறு அதில் பேசியிருந்தார்.