“சூப்பர் ஸ்டார்களோடு நடிக்க 5000 ரூபாய் போதும்” -போலி விளம்பரத்தால் பணத்தை சுருட்டிய சினிமா கம்பெனி.

 

“சூப்பர் ஸ்டார்களோடு நடிக்க 5000 ரூபாய் போதும்” -போலி விளம்பரத்தால் பணத்தை சுருட்டிய சினிமா கம்பெனி.


5000 ரூபாய் கொடுத்தாலே பெரிய நடிகர்களோடு நடிக்கலாம் என்று போலியான விளம்பரம் செய்து பலரிடம் பணத்தை ஆட்டைய போட்ட கூட்டத்தை போலீசார் தேடி வருகிறார்கள் .

“சூப்பர் ஸ்டார்களோடு நடிக்க 5000 ரூபாய் போதும்” -போலி விளம்பரத்தால் பணத்தை சுருட்டிய சினிமா கம்பெனி.


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அம்போலி பகுதியில் ஒரு சினிமா தயாரிப்பு நிறுவனம் உள்ளது .இந்த நிறுவனம் பாலிவுட்டில் பிரபலமான நடிகர்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க இருப்பதாகவும் , அதில் அந்த பெரிய நடிகர்களுடன் நடிப்பதற்கு பல நடிகர்கள் தேவையென்று இணையத்தில் விளம்பரம் செய்தது .இந்த விளம்பரத்தை பார்த்த பலர் அந்த நிறுவனத்தின் படத்தில் நடிக்க மனு செய்தார்கள் .அதனால் அந்த நிறுவனம் அந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஒருவருக்கு 5000 முதல் 10000 வரை வசூல் செய்தது .
பெரிய நடிகர்களான பிரபாஸை வைத்து முதலில் படம் துவங்க இருப்பதாக அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது .இதனால் அவரோடு நடிக்க விரும்பிய பலர் அந்த நிறுவனத்திடம் 5000 முதல் 10000 வரை பணம் கட்டினார்கள் .ஆனால் அந்த நிறுவனம் படப்பிடிப்பை ஆரம்பிக்காமல் காலம் தாழ்த்தியது .இதனால் அந்த நிறுவனத்திடம் பணம் கட்டிய பலர் அந்த தயாரிப்பு நிறுவனத்தை அணுகி பணத்தை திரும்ப தருமாறு கேட்டார்கள் .ஆனால் அந்த தயாரிப்பு நிறுவனம் பணத்தை தராமல் ஏமாற்றியது .இதனால் பாதிக்கப்பட்ட நடிகர்கள் அந்த நிறுவனத்தின் மீது அம்போலி காவல் நிலையத்தில் புகார் கூறினார்கள் .பொலிஸார் வழக்கு பதிவு செய்து அந்த பட தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரணை மேற்கொண்டார்கள் .அப்போது அந்த தாயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த ஒரு நிர்வாகியிடமிருந்து பலரின் பாஸ்ப்போர்ட்டுகள் ,மற்றும் அந்த போலியான சினிமா கம்பெனியின் லெட்டர் ஹெட் போன்றவைகளை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள் .சினிமா துறையை சேர்ந்த ஒரு முக்கிய புள்ளியும் அந்த நிறுவனத்தின் மோசடி குறித்து போலீசில் கூறியுள்ளார் .அதன் பேரிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை வாங்கி தர போராடி வருகிறார்கள் .

“சூப்பர் ஸ்டார்களோடு நடிக்க 5000 ரூபாய் போதும்” -போலி விளம்பரத்தால் பணத்தை சுருட்டிய சினிமா கம்பெனி.