உருவானது டவ்தே புயல் : தமிழகம் உள்பட 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

 

உருவானது டவ்தே புயல் :  தமிழகம் உள்பட 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது.

உருவானது டவ்தே புயல் :  தமிழகம் உள்பட 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

இந்நிலையில் டவ்தே புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18-ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது.கேரளா, கர்நாடகா, தமிழகம், மஹாராஷ்டிரா, கோவா, குஜராத் மாநிலங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கனமழை பெய்யும் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.

உருவானது டவ்தே புயல் :  தமிழகம் உள்பட 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

அடுத்த 24 மணி நேரத்தில் டவ்-தே புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இதனால் கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் மீனவர்கள் வருகின்ற 17ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.