சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய 2 பேருக்கு இரட்டை ஆயுள் -2பேருக்கு 7 அண்டு கடுங்காவல்

 

சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய 2 பேருக்கு இரட்டை ஆயுள் -2பேருக்கு 7 அண்டு கடுங்காவல்

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த கிருஷ்ணவேணியும், இளங்கோவனும் கடந்த 2014ம் ஆண்டில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்தி அடைத்து வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்து வந்துள்ளனர். இதையடுத்து புளியம்தோப்பை சேர்ந்த நவாஸ், மின்ட் ஸ்டாலினிடம் பணத்தை வாங்கிவிட்டு விற்றுவிட்டனர். அவர்கள் அச்சிறுமியை பலமுறை பாலியல் பலாக்காரம் செய்து விபச்சாரத்திலும் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.

சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய 2 பேருக்கு இரட்டை ஆயுள் -2பேருக்கு 7 அண்டு கடுங்காவல்

சிபிசிஐடி விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு சிறுமி குறித்த தகவல் கிடைக்க அவர்கள் அச்சிறுமியை மீட்டனர். சிறுமியின் வாக்குமூலத்தின்படி கிருஷ்ணவேணி, இளங்கோவன், நவாஸ், மிண்ட் ஸ்டாலின் ஆகியோரை கைது செய்து மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணை முடிந்து கடந்த 26ம் தேதி அன்று கிருஷ்ணவேணி, இளங்கோவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. நவாஸ், மிண்ட் ஸ்டாலின் இருவருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் தலா 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி ராஜபட்சுமி.

இதையடுத்து குற்றவாளிகள் 4 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.