சென்னையில் ரூ.5,000 கோடி செலவில் ஈரடுக்கு மேம்பாலம்!

 

சென்னையில் ரூ.5,000 கோடி செலவில் ஈரடுக்கு மேம்பாலம்!

சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையில் ரூபாய் 5 ஆயிரம் கோடி செலவில் 6 வழிச்சாலையுடன் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது .

சென்னையில் ரூ.5,000 கோடி செலவில் ஈரடுக்கு மேம்பாலம்!

சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் விரைவு சாலை அமைக்கும் திட்டத்திற்கு கடந்த 2010ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 2010 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் சுற்றுச்சூழல் விதிகளை காரணம் காட்டி தமிழக அரசால் 2012 ஆம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பறக்கும் சாலை பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என 2018 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய போது அன்றைய மதிப்பீடு ரூ.1, 815 கோடி. 4 வழியாக அமைக்க திட்டமிடப்பட்டது. பின்னர் 4 வழிக்கு பதிலாக ஆறு வழி சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு ரூ. 3,100 கோடி ஆக உயர்த்தப்பட்டது.

சென்னையில் ரூ.5,000 கோடி செலவில் ஈரடுக்கு மேம்பாலம்!

ரூ.3,100 கோடியிலிருந்து தற்போது இந்த திட்டத்தின் மதிப்பீடு 5 ஆயிரம் கோடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அரசு சார்பில் ரூபாய் 400 முதல் 500 கோடியும்,மத்திய அரசு சார்பில் 1000 கோடியும் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது