நீங்க தீவிர பசியிலிருக்கும்போது இதெல்லாம் செஞ்சா தீவிரவாதியா கூட மாறிடுவீங்க -உஷார்!

 

நீங்க தீவிர பசியிலிருக்கும்போது இதெல்லாம் செஞ்சா தீவிரவாதியா கூட மாறிடுவீங்க -உஷார்!

நாம் பசியில் இருக்கும் போது பக்கத்தில் கொலையே நடந்தாலும் கவலை படமாட்டோம். அதுபோல தீவிர பசியில் இருக்கும் போது ஒருவர் தவறான முடிவுகள் எடுக்கவும் வாய்ப்புள்ளது.

நீங்க தீவிர பசியிலிருக்கும்போது இதெல்லாம் செஞ்சா தீவிரவாதியா கூட மாறிடுவீங்க -உஷார்!

மனிதன் உயிர் வாழ நீர் மற்றும் உணவு மிகவும் முக்கியமானது. குறிப்பாக பசியாக இருக்கும் போது எந்த வேலையும் செய்ய தோன்றாது. நல்ல சத்தான உணவுகளை உண்டால் மட்டுமே நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

ஆனால் இந்த பிஸியான காலத்தில் சிலர் சாப்பிடுவதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை. சரி வாங்க.. பசியாக இருக்கும் போது நாம் எதை செய்ய கூடாது குறித்து பார்க்கலாம்.

பசியாக இருக்கும் போது எவ்வளவு கோபமாக இருந்தாலும் உங்கள் அன்பானவர்களிடம் எந்தவித வாதங்களிலும் ஈடுபடாதீர்கள். பசியினால் ஏற்படும் வெறியால் உங்கள் உறவுகளில் விரிசல் விட வாய்ப்புள்ளது.

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. அவ்வாறு செய்வதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும். வழக்கமாக செய்யும் வேலைகளையும் செய்ய முடியாமல் போகும். சில சமயங்களில் மயக்கமும் ஏற்படக்கூடும்.

வெறும் வயிற்றில் இருக்கும் போது காரமான உணவுகளை சாப்பிடும் போது வயிற்று எரிச்சலை உண்டாக்கும். இதனால் உங்கள் வயிற்றில் வலி ஏற்படலாம். எனவே வயிற்று எரிச்சலை தவிர்க்க சத்தான உணவுகளை உட்கொள்வது அவசியம்.

அதுபோல வெறும் வயிற்றில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உங்கள் ஆரோக்கியத்தை வேகமாக தாக்கும். அதனால் உணவு சாப்பிடுவதற்கு முன்பு மதுவை அருந்தாதீர்கள்.

நாம் நம்முடைய உடலுக்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிடும் பொழுது பொய் பசியை உண்டாக்கி விடுகிறது. ஒரு  சத்தான, ஆரோக்கியமான உணவு நாம் எடுக்காவிட்டால் நம் உடலில் இயல்பாகவே பொய் பசி என்பது வந்துவிடும். பொய் பசி என்பது நமக்கு பசிக்காமலேயே பசிப்பது போல ஒரு உணர்வை உண்டாக்குவது தான். அப்போது தான் வயிறு முழுக்க சாப்பிட்டிருப்போம். ஆனால் அப்படி இருந்தும் கூட மறுபடியும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்கிற உணர்வை தூண்டுவது தான் பொய் பசி ஆகும். இந்த பொய் பசியை கட்டுப்படுத்தினால் நம் உடல் எடையையும் நம்மால் சுலபமாக எவ்வித பக்க விளைவுகளும் இல்லாமல் கட்டுப்படுத்திவிட முடியும். பசியை கட்டுப்படுத்தக்கூடிய இந்த உணவுகளை சாப்பிடும் பொழுது இயல்பாகவே உடல் பருமன் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

பசி ஏற்படும் சமயங்களில் நீங்கள் பாதாம் பருப்புகளை எடுத்து சாப்பிட்டு வரலாம். பாதாமில் மக்னீசியம், வைட்டமின் பி, ஆக்சிஜனேற்றிகள், நார் சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் அடங்கி இருப்பதால் மூன்று, நான்கு பாதாம் பருப்புகளை சாப்பிடும் பொழுது வயிறு நிரம்பியது போல தோன்றி விடும்.

செரிமான பிரச்சனைகளை தீர்க்கும் இஞ்சி உடல் எடை குறைக்க பெருமளவு உதவி புரிகின்றது. . இஞ்சி டீ, இஞ்சி சாதம், இஞ்சி துவையல், இஞ்சி சட்னி என்று எந்த வகையிலும் இஞ்சியை நீங்கள் சேர்த்துக் கொள்ளும் பொழுது விரைவாக பசி எடுக்காது. ஆகவே மேற்கூறிய இந்த விஷயங்களை பின்பற்றும் பொழுது பொய் பசி என்பது ஏற்படாமல் இருக்கும் இதனால் உடல் எடை கணிசமாக குறையும்.