திமுக எம்பிக்கள் டி.ஆர். பாலு, தயாநிதிமாறன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்

 

திமுக எம்பிக்கள் டி.ஆர். பாலு, தயாநிதிமாறன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்

அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தி.மு.க எம்.பி-க்கள் தயாநிதி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர்.

ஒன்றிணைவோம் வா மூலம் பெறப்பட்ட மனுக்களை தலைமைச் செயலாளரிடம் அளிக்கச் சென்ற தி.மு.க எம்.பி-க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோரை தலைமைச் செயலாளர் சண்முகம் அவமானப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பேட்டி அளித்த டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் தங்களை தலைமைச் செயலாளர் நடத்திய விதம் பற்றி கூறிய வார்த்தைகள் தாழ்த்தப்பட்டவர்களை அவமானப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் தயாநிதிமாறன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. டி.ஆர்.பாலு மீதும் புகார் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று தயாநிதிமாறன் மற்றும் டி.ஆர்.பாலு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

திமுக எம்பிக்கள் டி.ஆர். பாலு, தயாநிதிமாறன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திமுக எம்.பி.க்களான டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் மீது வரும் மே.29 ஆம் தேதி வரை போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இருவர் மீதான வழக்கின் விசாரணையையும் மே. 29 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.