“அவன மட்டும் விட்டுடாதீங்க”- கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த கல்லூரி மாணவி

 

“அவன மட்டும் விட்டுடாதீங்க”- கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த கல்லூரி மாணவி

திருச்சி

மணப்பாறை அருகே கல்லூரி மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு, கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள வேம்பணூர் சிலோன் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது 17 வயது மகள் புதுக்கோட்டையில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி முதல் மாணவியை காணவில்லை என கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில், இதுகுறித்து வளநாடு காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் அளித்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முத்தன் என்பவருடைய தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே செல்போன் மற்றும் கடிதம் ஒன்று கிடந்துள்ளது.

“அவன மட்டும் விட்டுடாதீங்க”- கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த கல்லூரி மாணவி

அதில் மாணவி, “எனது சாவுக்கு காரணம் என்னுடைய மொபைலில் பிரியா என பதிவு செய்துள்ள நம்மபரில் உள்ளவன் தான், அவன மட்டும் விட்டுடாதீங்க, அவனை மட்டும் உயிரோட விட்டா, என்னை மாதிரி ஏராளமான பொண்ணுங்க செத்துவிடும்” என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், தனது மொபைல் நம்பர் பாஸ்வேர்டு எண்ணையும் எழுதி வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இலுப்பூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சிறுமியின் சடலத்தை மீட்டனர். பின்னர் சடலத்தை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த வளநாடு போலீசார், சிறுமி எழுதிய கடிதத்தையும், மொபைல் போனையும் கைப்பற்றி அவர் கூறியுள்ள நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.