‘எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்’ : சோனியா காந்தி வேண்டுகோள்!

 

‘எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்’ : சோனியா காந்தி வேண்டுகோள்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 26ம் தேதியில் இருந்து ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில், அவர்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.

‘எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்’ : சோனியா காந்தி வேண்டுகோள்!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக இன்று, நாடு முழுவதும் பாரத் பந்த் அமல்படுத்தப்பட்டது. நாளை 6 ஆவது முறையாக மத்திய அரசு, விவசாய அமைப்புகளுடன் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது. இந்த நிலையில், விவசாயிகள் அங்கே போரடிக் கொண்டிருப்பதால் தான் பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

‘எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்’ : சோனியா காந்தி வேண்டுகோள்!

விவசாயிகள் அங்கு போரடிக் கொண்டிருக்கும் சூழலில் எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். நாளை சோனியா காந்தியின் 74ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அதனை கொண்டாட திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.