மே 31 வரை விமான சேவை தொடங்க வேண்டாம் – மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை

 

மே 31 வரை விமான சேவை தொடங்க வேண்டாம் – மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை

சென்னை: மே 31-ஆம் தேதி வரை விமான சேவை தொடங்க வேண்டாம் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைகள் வருகிற 25-ஆம் தேதி முதல் (திங்கள்கிழமை) மீண்டும் தொடங்க உள்ளன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மே 31 வரை தமிழகத்தில் விமான சேவைகளை தொடங்க வேண்டாம் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கையை ஒத்தி வைக்குமாறு தமிழக அரசு மத்திய விமான அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.

மே 31 வரை விமான சேவை தொடங்க வேண்டாம் – மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை

ஆரம்பத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து விமான சேவைகள் இயங்கும் என்றும், படிப்படியாக விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரிப்பது மட்டுமில்லாமல் ஊரடங்கால் சென்னையில் போதுமான பொதுப் போக்குவரத்து இல்லை என்ற காரணத்தாலும் விமான சேவைகளை தொடங்க வேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.