“வானதி சீனிவாசன் அங்க போட்டியிட கூடாது” – எடப்பாடிக்கு தொண்டர்கள் உருண்டு புரண்டு எச்சரிக்கை!

 

“வானதி சீனிவாசன் அங்க போட்டியிட கூடாது” –  எடப்பாடிக்கு தொண்டர்கள் உருண்டு புரண்டு எச்சரிக்கை!

எதிர்வரும் தேர்தலில் பாஜகவுக்கு 20 சீட்டுகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. அந்த 20 தொகுதிகளைக் கண்டறியும் பணியில் இரு கட்சிகளும் இறங்கியுள்ளன. சில நாட்களுக்கு முன் உத்தேசமாக வெளியான பட்டியலில் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிடுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கெனவே மக்களவை தேர்தலில் கோவையை பாஜகவுக்கு ஒதுக்கி மண்ணைக் கவ்வியது.

“வானதி சீனிவாசன் அங்க போட்டியிட கூடாது” –  எடப்பாடிக்கு தொண்டர்கள் உருண்டு புரண்டு எச்சரிக்கை!

இதனால் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்த அதிமுகவினர் வானதி சீனிவாசன் போட்டியிடுவதாகத் தகவல் வெளியானவுடன் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். இன்னும் சில தினங்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடவிருப்பதால் அதற்கு முன்பே அத்திட்டத்தைக் கலைக்கும் வகையில், கோவையிலுள்ள அதிமுக அலுவலகத்துக்கு வந்தனர் அதிமுக தொண்டர்கள். கோவை தெற்கு தொகுதி அதிமுகவுக்கே வேண்டும் வேண்டும் என கோஷங்கள் எச்சரிக்கை விடுத்தனர். அதையும் மீறி பாஜகவுக்கு கொடுத்தால் கூண்டோடு ராஜினாமா செய்வோம் என்று கூறியுள்ளனர்.

உணர்ச்சி வேகத்தில் தொண்டர் ஒருவர் சட்டையைக் கழற்றி சுடும் வெயிலிலும் தரையில் உருண்டு பிரண்டு கோரிக்கை வைத்தது காண்போரின் கண்ணில் கண்ணீர் வரவழைத்தது. இதைக் கண்டால் எடப்பாடி பழனிசாமி கண்ணில் ரத்தமே வரலாம் என்பதால், பாஜகவுக்கு இத்தொகுதியைக் கொடுக்க அவர் யோசிப்பார் என்றே தெரிகிறது. தேமுதிக விலகிய சோகம் அடங்குவதற்கு முன்பு இப்படியொரு சோதனை எடப்பாடியின் தலையின் மேல் இடியாய் இறங்கியிருக்கிறது.