வாழ்த்தினாலும் வாழ்த்தாவிட்டாலும் கவலையில்லை… ரஜினியை இன்சல்ட் செய்த தி.மு.க?

 

வாழ்த்தினாலும் வாழ்த்தாவிட்டாலும் கவலையில்லை… ரஜினியை இன்சல்ட் செய்த தி.மு.க?


ரஜினிகாந்த் வாழ்த்தினாலும் வாழ்த்தாவிட்டாலும் தி.மு.க-வுக்கு கவலையில்லை என்று ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பது அரசியல் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறியிருந்தார். அரசியல் நாகரீகமாக இந்த வாழ்த்து பார்க்கப்படுகிறது.

வாழ்த்தினாலும் வாழ்த்தாவிட்டாலும் கவலையில்லை… ரஜினியை இன்சல்ட் செய்த தி.மு.க?


இந்த நிலையில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் இன்று நிருபர்கள் பேட்டி எடுத்தனர். துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், உதயநிதி ஸ்டாலின் தி.மு.க இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட போது வாழ்த்து தெரிவிக்கவில்லையே என்று கேட்டனர். அதற்கு ஆர்.எஸ்.பாரதி, “இது கற்பனையான செய்தி. துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் நண்பர்கள் என்பதால் ரஜினிகாந்த் வாழ்த்து

வாழ்த்தினாலும் வாழ்த்தாவிட்டாலும் கவலையில்லை… ரஜினியை இன்சல்ட் செய்த தி.மு.க?

தெரிவித்துள்ளார். அவர் வாழ்த்தினாலும், வாழ்த்தாமல் இருந்தாலும் தி.மு.க-வுக்கு கவலையில்லை. ரஜினி வாழ்த்தியதில் எங்களுக்கு எந்த வரவும் இல்லை, செலவும் இல்லை” என்றார்.
ரஜினிகாந்து வாழ்த்து தேவையில்லை என்பது போல அவர் கூறவில்லை. உதயநிதி ஸ்டாலினுக்கு ஏன் வாழ்த்து கூறவில்லை என்ற கேள்விக்கே இப்படி பதில் அளித்துள்ளார். இருப்பினும் ரஜினிகாந்தை ஆர்.எஸ்.பாரதி இன்சல்ட் செய்துவிட்டார் என்று சமூக ஊடகங்களில் செய்தி வேகமாகப் பரவி வருகிறது.