தினமும் சுய இன்பம்… தாம்பத்திய உறவைப் பாதிக்குமா?

 

தினமும் சுய இன்பம்… தாம்பத்திய உறவைப் பாதிக்குமா?

சுய இன்பம்… இதை தவறான பழக்கம் என்று சொல்லப்பட்டு வருகிறது. இயற்கையான இந்த செயல்பாட்டில் எந்தத் தவறும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஒருவர் சுய இன்பம் காணும்போது அவரால் யாருக்கும் எந்தச் சூழலிலும் இடையூறு ஏற்படாது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

தினமும் சுய இன்பம்… தாம்பத்திய உறவைப் பாதிக்குமா?ரத்தம் – விந்து:
சுய இன்பப் பழக்கத்தால் பெரும்பாலும் ஆண்களுக்கே பாதிப்புகள் வருவதாகப் பேசப்படுகிறது. ஆகவே, ஆண் சுய இன்பம் பற்றி பேசுவதே சரியாக இருக்கும். தினமும் சுய இன்பம் காணும் ஆண்களுக்கு உடலில் ரத்தம் வற்றிப்போய்விடும், ஆணுறுப்பு சிறுத்துவிடும் என்பதெல்லாம் தவறு.

ஒரு நாளைக்கு எத்தனைமுறை சுய இன்பம் காண வேன்டும் என்ற கேள்வி பலர் முன் எழும். இறைக்க இறைக்கத்தான் நீர் ஊறும் என்பதுமட்டுமல்ல, கிணற்றில் நீர் இருந்தால்தான் வெளிவரும் என்பதைப்போல விந்து இருந்தால்தான் ஒரு ஆணால் சுய இன்பம் காண முடியும், விந்தும் வெளிவரும். விந்து இல்லையென்றால் ரத்தம் வரும் என்பதெல்லாம் வேறு சில காரணங்களால் வரக்கூடியதே.

தினமும் சுய இன்பம்… தாம்பத்திய உறவைப் பாதிக்குமா?தாம்பத்தியம்:
திருமணத்துக்குமுன் தினமும் இரண்டுதடவை சுய இன்பம் காணும் ஒருவரால் திருமணமானபிறகு தாம்பத்தியம் வைத்துக்கொள்ள முடியுமா என்ற கவலையுடன் இருக்கிறார்கள். சுய இன்பம் காணும்போது சீக்கிரமாக வெளிவருவதால் தாம்பத்தியத்தின்போதும் சீக்கிரம் வந்துவிடுமோ என்ற பயமே அதற்குக் காரணம்.

சுய இன்பத்தின்போதான செயல்பாட்டுக்கும் தாம்பத்திய உறவின்போதான செயல்பாட்டுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. ஏனென்றால் தாம்பத்திய உறவின்போது ஆணும் பெண்ணும் சேர்ந்து செயல்படுவது மற்றும் சில முன் விளையாட்டுகளில் ஈடுபடுவதால் தாமதமாகவே விந்து வெளிப்படும்.

தினமும் சுய இன்பம்… தாம்பத்திய உறவைப் பாதிக்குமா?விந்து வெளியேற்றம்:
சுய இன்பத்தின்போது விந்தினை வெளியே தள்ளுவது மட்டுமே குறியாக இருப்பார்கள். ஆனால், தாம்பத்தியத்தின்போது இன்பம் காண வேண்டும், அது நீண்ட நேர இன்பமாக இருக்க வேண்டும் என்று கருதுவதால் விந்து சீக்கிரம் வெளிப்படாது. மேலும் வெற்றிலை, பாக்கு போட்டுக்கொள்வது, சின்ன வெங்காயம் சாப்பிடுவது போன்ற சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த பிறகே பலரும் தாம்பத்திய உறவுக்கு தயாராகிறார்கள் என்பதால் கவலைப்படத் தேவையில்லை.

இதுவரை உடல்ரீதியான உறவு கொள்ளாதவரை விந்து வெளியேற்றம் குறித்து எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டாம். பிரச்சினைகள் ஏதும் வந்தால் அதன்பிறகு தேவையான நடவடிக்கைகள் எடுத்து சரிசெய்து கொள்ளலாம். தேவைப்பட்டால் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
எதற்கும் ஓர் எல்லை உண்டு என்பதுபோல சுய இன்பம் வைத்துக்கொள்வதற்கும் ஓர் எல்லை உண்டு. சிலர் வித்தியாசமான முறைகளில் சுய இன்பம் காண்பதாலும் போதையில் அடிக்கடி சுய இன்பம் காண்பதாலும் ஆணுறுப்பு விரைப்பதில் பிரச்சினைகள் வரலாம்.

பொதுவாக அதிக அளவில் சுய இன்பம் காண்பதைத் தவிர்ப்பது நல்லது.
சுய இன்பம் காண்பதால் சில ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் இதயத் துடிப்பு சீராகும். தூக்கமின்றி தவிக்கும் பலர் சுய இன்பத்துக்குப் பிறகு நிம்மதியாக உறங்குவார்கள். உச்சகட்டத்தின்போது கார்டிசோல் அதிகமாகும். இதன்மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சுய இன்பம் கொள்வதால் இதுபோன்று பல நன்மைகள் கிடைக்கின்றன என்பது உண்மை.