காதல் திருமணம் செய்துகொண்ட மருத்துவர்கள் பாதுகாப்புக்கோரி காவல்நிலையத்தில் தஞ்சம்!

 

காதல் திருமணம் செய்துகொண்ட மருத்துவர்கள் பாதுகாப்புக்கோரி காவல்நிலையத்தில் தஞ்சம்!

மதுரையில் காதல் திருமணம் செய்துகொண்ட மருத்துவர்கள் பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

காதல் திருமணம் செய்துகொண்ட மருத்துவர்கள் பாதுகாப்புக்கோரி காவல்நிலையத்தில் தஞ்சம்!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த திவ்யாமோனிஷா என்ற மருத்துவரும் திருச்சியை சேர்ந்த லெனின் என்ற மருத்துவரும் பல ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர். திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துவரும், இருவரும் நேற்று கோவிலில் காதல் திருமணம் செய்துள்ளனர். மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என கூறி காதல் திருமணத்திற்கு பெண் மருத்துவரின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மதுரை தல்லாகுளம் மகளிர் காவல்நிலையத்தில் காதல் திருமணம் முடித்த மருத்துவர்கள் இருவரும் பாதுகாப்பு கோரி தஞ்சம் புகுந்தனர். காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு உள்ளதால் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தனர். புகாரை பெற்றுகொண்ட காவல்துறையினர் இருவரையும் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.