`கொரோனா நோயாளிகளே கவலை வேண்டாம்; உடனே சிகிச்சை அளிக்க வருவாங்க!’- டாக்டர்களை தொடர் கொள்ள வாக்கி டாக்கி

 

`கொரோனா நோயாளிகளே கவலை வேண்டாம்; உடனே சிகிச்சை அளிக்க வருவாங்க!’- டாக்டர்களை தொடர் கொள்ள வாக்கி டாக்கி

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்க சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் உள்ள வார்டுகளில் உள்ள செவிலியர்கள், டாக்டர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் குறித்து தகவல் தெரிவிக்கவும், அவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்கவும் இந்த வாக்கி டாக்கி பயன்படுத்தப்படுகிறது.

`கொரோனா நோயாளிகளே கவலை வேண்டாம்; உடனே சிகிச்சை அளிக்க வருவாங்க!’- டாக்டர்களை தொடர் கொள்ள வாக்கி டாக்கி

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்ப அதிகரித்து கொண்டு செல்கிறது. நேற்று மட்டும் பாதிக்கப்பட்டோர்களின் இதுவரை இல்லாத அளவுக்கு 4,329 ஆக அதிகரித்தது. 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் 1,385 பேர் இறந்துள்ளனர். ஒரே நாளில் 2,357 பேர் சிகிச்சை முடிவு வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 58,378 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 42,955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்தநிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புதிய முயற்சியாக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் உடல்நிலை பற்றி தெரிந்து கொள்வதற்கும், அவர்களை எளிதாக தொடர்பு கொண்டு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கும் ‘வாக்கி டாக்கி’ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

`கொரோனா நோயாளிகளே கவலை வேண்டாம்; உடனே சிகிச்சை அளிக்க வருவாங்க!’- டாக்டர்களை தொடர் கொள்ள வாக்கி டாக்கி

இதுகுறித்து மருத்துவமனை டீன் டாக்டர் தேரனிராஜன் கூறுகையில், “தற்போதையை சூழலில் டாக்டர்களும், நோயாளிகளும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதில் எளிதாக இருக்கும் என்பதற்காக வாக்கி-டாக்கி முறையை ஏற்பாடு செய்துள்ளோம். கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு தளத்துக்கும் ஒரு ‘வாக்கி டாக்கி’ என மொத்தம் 20 டாக்கி வழங்கப்பட்டுள்ளது. மோசமான உடல்நிலையுடன் மருத்துவமனையில் அனுமதியாகும் நோயாளிகள் குறித்து தகவல்களை டாக்டர்களுக்கு உடனடியாக தெரிவிப்பதற்காக இந்த ‘வாக்கி டாக்கி’ கொரோனா வார்டுகளில் இருக்கும் செவிலியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா வார்டுக்குள் டாக்டர்கள், செவிலியர்கள் யாரும் தங்களது செல்போன்களை கொண்டு வருவதில்லை. அதனால் வாக்கி டாக்கியுடன் சேர்த்து 20 ‘ஆண்ட்ராய்டு’ செல்போன்களும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள ‘வாக்கி டாக்கி’ முறை பலன் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக ‘வாக்கி டாக்கி’ மற்றும் செல்போன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மருத்துவமனையில் அதிகமான உயிரிழப்புகள் அதிகாலையில் ஏற்படுவதால், இரவு பணியில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.