“70 லட்சம் எடுத்துக்கிட்டு நான் சொல்ற இடத்துக்கு வந்துடு” -ஒரு டாக்டருக்கு ஒரு பொண்ணு எதுக்காக போன் பண்ணுச்சி தெரியுமா?

 

“70 லட்சம் எடுத்துக்கிட்டு நான் சொல்ற இடத்துக்கு வந்துடு” -ஒரு டாக்டருக்கு ஒரு பொண்ணு எதுக்காக போன் பண்ணுச்சி தெரியுமா?

ஒரு டாக்டரின் மகனை கடத்தி வைத்து கொண்டு ஒரு பெண் உள்பட பலர் 70 லட்சம் பணம் கேட்டு டார்ச்சர் செய்ததால் போலீசார் தேடி வருகிறார்கள் .

“70 லட்சம் எடுத்துக்கிட்டு நான் சொல்ற இடத்துக்கு வந்துடு” -ஒரு டாக்டருக்கு ஒரு பொண்ணு எதுக்காக போன் பண்ணுச்சி தெரியுமா?


உத்திரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் வசிக்கும் ஒரு டாக்டரின் மகன் கவுரவ் ஹல்தார் என்ற 21 வயதான வாலிபர் .இவர் கோட்வாலி பகுதியில் ஹரிபூர் வட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் , ஆயுர்வேத மருத்துவம் (பிஏஎம்எஸ்) படித்து வருகிறார். இவரின் தந்தையும் ஒரு ஆயுர்வேத மருத்துவர் ஆவார் .இவர் அங்கு ஒரு க்ளினிக் நடத்தி வருகிறார் .
இந்நிலையில் அந்த டாக்டரின் மகன் கவுரவை கடத்தி பணம் பறிக்க ஒரு கும்பல் திட்டமிட்டது .ஏனெனில் அந்த டாக்டர் அந்த பகுதியில் மிகவும் பணக்காரர் என்பதையும் அவரிடம் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பதையும் அந்த கூட்டம் அறிந்திருந்தது ,அதனால் அவரின் மகனை கடத்த ஒரு மாஸ்டர் பிளான் போட்டார்கள் .
அந்த திட்டப்படி கடந்த திங்கள் கிழமையன்று கவுரவ் கல்லூரிக்கு சென்று விட்டு அவர் தங்கியிருக்கும் கல்லூரியின் விடுதிக்குள் சென்றார் .அப்போது அவரின் தந்தையிடமிருந்து போன் வந்துள்ளது .அவரிடம் பேசிவிட்டு விடுதிக்குள் செல்ல முற்பட்டபோது சிலர் காரில் வந்து அவரை கடத்தி சென்றனர் .அதன் பிறகு அந்த கடத்தல் கூட்டம் அவரின் தந்தைக்கு போன் செய்து 70 லட்ச ரூபாய் பிணையத்தொகையாக கேட்டார்கள் .அப்போது ஒரு பெண் அந்த டாக்டரிடம் பேசி இந்த பணத்தை ஜனவரி 22ம் தேதிக்குள் கொண்டு வந்து கொடுக்காவிட்டால் தங்களின் மகன் விபரீத விளைவுகளை சந்திப்பார் என்று கூறினார் .அதை கேட்டு பயந்து போன அந்த மாணவரின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து ,ஆறு தனிப்படை அமைத்து அந்த கடத்தல் கும்பலை வலை வீசி தேடி வருகிறார்கள் .

“70 லட்சம் எடுத்துக்கிட்டு நான் சொல்ற இடத்துக்கு வந்துடு” -ஒரு டாக்டருக்கு ஒரு பொண்ணு எதுக்காக போன் பண்ணுச்சி தெரியுமா?