டெல்லியில் கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் தற்கொலை!

 

டெல்லியில் கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் தற்கொலை!

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 1 மாதமாக கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் விவேக் ராய் தற்கொலை செய்துகொண்டார்.

டெல்லியில் கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் தற்கொலை!

டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சூழலில் அதே மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் விவேம் ராய் தற்கொலை செய்துகொண்டார். தினசரி ஏற்பட்ட கொரோனா உயிர் பலிகளால், அவர் கடுமையான மன அழுத்தத்தால் இருந்ததாகவும், அதனாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாக உடன் பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உத்திரபிரதேசத்தின் கோராக்பூரை சேர்ந்த விவேக் ராய், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருப்பதாக முன்னாள் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவி வாந்தேத்கர் தெரிவித்துள்ளார்.