பருப்பு சாப்பிட்டா நெருப்பு மாதிரி இருக்கலாம் -இனி மறுப்பு சொல்லாதீங்க.
பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் ஒருவரின் அன்றாட உணவில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது . அவை புரதம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வின் முக்கிய ஆதாரமாக இருப்பதால் நீங்கள் அவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்
பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் பருப்பு வகைகள் மற்றும் தானியங்களை உட்கொள்வதன் முக்கியத்துவத்தை கூறுகிறார்
* முதுமையை தடுக்கிறது : –
சிலருக்கு இளம் வயதிலேயே முடி நரைக்கும் .அந்த பிரச்சினைகள் சரியாகும்
* எலும்புகளுக்கு வலு சேர்க்கும் –
எலும்புகளுக்கு வலு சேர்த்து அதை பாதுகாக்கிறது, பலப்படுத்துகிறது.
* நோய் எதிர்ப்பு சக்தி –
நம் உடல் கிருமி தாக்குதலுக்கு உள்ளாகும் போது ஆன்டிபாடிகளை உருவாக்க பருப்புகள் உதவுகிறது
பருப்பு வகைகள் சாப்பிடுவதற்கு சில விதிகள் உள்ளன என்று திவேகர் கூறுகிறார்.
* சமைப்பதற்கு முன் ஊறவைத்து முளைக்க வைக்கவும்
* பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் (1: 3) / பருப்பு வகைகள் மற்றும் தினை (1: 2) ஆகிய சரியான விகிதத்தில் சமையலில் பயன்படுத்தவும்
சிலருக்கு பருப்பு சாப்பிட்டால் மலச்சிக்கல், வாயு பிரச்சினைகள் தோன்றும் .அவற்றை எளிதான முறையில் சரிசெய்ய , பருப்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைப்பதன் மூலம் அந்த பிரச்சினைகள் சரியாகும் என்றார் .
அது சமைக்கப்படுவதற்கு சற்று முன், ஒரு சிட்டிகை மஞ்சள், கொஞ்சம் பெருங்காயம் சேர்த்து, சிறிது இஞ்சியை சேர்த்து அரைக்கவும். “இந்த சமையலறை ரகசியம் பருப்பின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதனால் ஏற்படும் செரிமான பிரச்சினைகளையும் சரி செய்யும் ” என்று அவர் கூறினார்.