பாஜக தமிழத்தில் ஆட்சிக்கு வர மக்கள் விரும்புவார்களா? அமைச்சர் ஜெயக்குமார்

 

பாஜக தமிழத்தில் ஆட்சிக்கு வர மக்கள் விரும்புவார்களா? அமைச்சர் ஜெயக்குமார்

பாஜக தமிழத்தில் ஆட்சிக்கு வர மக்கள் விரும்புவார்களா? தமிழத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இதை யோசிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

பாஜக தமிழத்தில் ஆட்சிக்கு வர மக்கள் விரும்புவார்களா? அமைச்சர் ஜெயக்குமார்

திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் சார்பில் நடந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் அறிமுக கூட்டத்தில், பா.ஜ.கவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.

பாஜக தமிழத்தில் ஆட்சிக்கு வர மக்கள் விரும்புவார்களா? அமைச்சர் ஜெயக்குமார்

அக்கூட்டத்தில் பேசிய காயத்ரி, ‘’தமிழகத்தில் கண்டிப்பாக பா.ஜ.க ஆட்சி அமையும் – இனி வரும் காலங்களில் தாமரை தான் ஆட்சியில் அமரும். தமிழ் கடவுளை பெரிய அளவில் இழிவுப்படுத்தி உள்ளனர், தமிழ் மக்கள் பொறுத்து கொள்ளாமல் அதற்கு பெரிய அளவில் எதிர்பினை தெரிவித்து உள்ளனர் – இது கண்டிப்பாக வருகின்ற தேர்தலில் எதிரொலிக்கும். பா.ஜ.கவின் பக்கம் மக்கள் நிற்பார்கள்’’என்றார் அழுத்தமாக.

பாஜக தமிழத்தில் ஆட்சிக்கு வர மக்கள் விரும்புவார்களா? அமைச்சர் ஜெயக்குமார்

காயத்ரி ரகுராமின் இந்த பேச்சு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ” பாஜக தமிழத்தில் ஆட்சிக்கு வர மக்கள் விரும்புவார்களா?” என்று கேள்வியை எழுப்பி உள்ளார். இது,பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

-கதிரவன்