“அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் படங்களை போஸ்டர்களில் பயன்படுத்த வேண்டாம்” : ரஜினி மக்கள் மன்றம்

 

“அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் படங்களை போஸ்டர்களில் பயன்படுத்த வேண்டாம்” : ரஜினி மக்கள் மன்றம்

ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

“அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் படங்களை போஸ்டர்களில் பயன்படுத்த வேண்டாம்” : ரஜினி மக்கள் மன்றம்

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்பட்டார். அதேபோல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டார். அத்துடன் கட்சி தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் ரஜினி தற்போது துரிதப்படுத்தியுள்ளார்.

“அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன் படங்களை போஸ்டர்களில் பயன்படுத்த வேண்டாம்” : ரஜினி மக்கள் மன்றம்

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒட்டப்படும் போஸ்டர்களில் அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியன், மாநில நிர்வாகி சுதாகர் புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஜினி புகைப்படத்துடன் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும் ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது. அர்ஜுன மூர்த்தி, தமிழருவி மணியனுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்ட நிலையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.