கொரோனாவில் காட்டியது போல் வெட்டுக்கிளியிலும் அலட்சியம் காட்டிவிட வேண்டாம்! – பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

 

கொரோனாவில் காட்டியது போல் வெட்டுக்கிளியிலும் அலட்சியம் காட்டிவிட வேண்டாம்! – பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

கொரோனா பரவலில் தமிழக அரசு காட்டிவரும் அலட்சியத்தை வெட்டுக்கிளி விவகாரத்திலும் தொடராமல் – பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கொரோனாவில் காட்டியது போல் வெட்டுக்கிளியிலும் அலட்சியம் காட்டிவிட வேண்டாம்! – பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, விவசாயிகளையும் பொதுமக்களையும் பெரும் அச்சுறுத்தலுக்கும் அவதிக்கும் ஆளாக்கிவரும் நிலையில்; தமிழகத்தின் கிருஷ்ணகிரி- நேரலகிரி கிராமத்திலும், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளிலும் படையெடுத்த வெட்டுக்கிளிகள், அங்குள்ள மக்களைப் பதற்றத்திற்கு ஆட்படுத்தி இருக்கின்றன. பாலைவன வெட்டுக்கிளிகளுக்கும், நமது மண்ணின் தன்மைக்கேற்ற வெட்டுக்கிளிகளுக்கும் வேறுபாடு உண்டு என இயற்கை ஆர்வலர்களும், அறிவியலாளர்களும் தெரிவிக்கிறார்கள்; அதேசமயம், அதன் தாக்கம் குறித்து கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.

கொரோனாவில் காட்டியது போல் வெட்டுக்கிளியிலும் அலட்சியம் காட்டிவிட வேண்டாம்! – பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழக அரசு, கொரோனாவில் காட்டிய அலட்சியத்தைத் தொடராமல்; வெட்டுக்கிளிகளால் ஏற்படும் இழப்பும் வந்து தம் தலையில் விழுந்துவிடுமோ என்ற பீதி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டு விடாமல் தடுக்க தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளத் தொடங்கிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.