DMS வளாகத்தில் பணியாற்றும் அரசு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி!

 

DMS வளாகத்தில் பணியாற்றும் அரசு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி!

காசநோய் தடுப்பு மற்றும் தேசிய சுகாதார திட்டம்  உள்பட மருத்துவத்துறை சார்ந்த அலுவலகங்கள் உள்ளன. 

சென்னை தேனாம்பேட்டையில் DMS எனப்படும் ஊரக மருத்துவ பணிகள் கழக அலுவலக வளாகம் உள்ளது. இங்கு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட மருத்துவத்துறை சார்ந்த அலுவலங்கள், . 
108 ஆம்புலன்ஸ், பொது சுகாதாரத்துறை, காசநோய் தடுப்பு மற்றும் தேசிய சுகாதார திட்டம்  உள்பட மருத்துவத்துறை சார்ந்த அலுவலகங்கள் உள்ளன. 

TT

இந்நிலையில் ஊரக மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரியும் 45 வயது ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய  சுகாதாரத்துறை அதிகாரிகள் முனைந்துள்ளனர்.  சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இங்கு  தான் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.