பேக்கரி விவகாரம் : திமுக பிரமுகர் பிரகாசம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!

 

பேக்கரி விவகாரம் : திமுக பிரமுகர் பிரகாசம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!

மதுரை வாடிப்பட்டியில் பேக்கரி தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுக பிரமுகர் பிரகாசம்
கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பேக்கரி விவகாரம் : திமுக பிரமுகர் பிரகாசம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அதிமுக நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான பேக்கரி கடை ஒன்று செயல்பட்டு வந்தது. கொரோனாவால் பேக்கரி அடைக்கப்பட்டுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்பு பட்டாக்கத்தி, கட்டைகளுடன் அங்கு வந்த திமுக வாடிப்பட்டி நிர்வாகிகள் சிலர் அந்த பேக்கரியை அடித்து உடைத்தனர். அந்த வளாகத்தில் இருந்த அரசு வங்கியின் ஜன்னல் கண்ணாடிகளையும் அவர்கள் சேதப்படுத்தினர். இதற்கான வீடியோ இணையத்தில் வைரலானது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.

பேக்கரி விவகாரம் : திமுக பிரமுகர் பிரகாசம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!

இந்நிலையில் மதுரை வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகரின் பேக்கரி தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுக பிரமுகர் பிரகாசம் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் போன்ற காரணங்களால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.