“பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திமுக சொன்னது உண்மை” : கனிமொழி எம்.பி. ட்வீட்!

 

“பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திமுக சொன்னது  உண்மை” : கனிமொழி எம்.பி. ட்வீட்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பேர் கைது விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி.கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.

“பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திமுக சொன்னது  உண்மை” : கனிமொழி எம்.பி. ட்வீட்!

தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு. பெண்களை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாசமாக படம்பிடித்து கும்பல் ஒன்று மிரட்டி வந்தது அம்பலமானது. 2019 பிப்ரவரியில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

“பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திமுக சொன்னது  உண்மை” : கனிமொழி எம்.பி. ட்வீட்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில் 2 ஆண்டுக்கு பிறகு அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் , அவரின் கூட்டாளிகள் பைக் பாபு ,கெரோன்பவுல் ஆகிய மூவர் கைதாகியுள்ளனர்.

இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, திமுக தொடர்ந்து சொல்லி வந்துள்ளது. திமுகவின் கூற்று உண்மை என்பதை இன்று, அதிமுக மாணவர் பிரிவின் பொள்ளாச்சி நகர செயலாளரையும், மேலும் இரு அதிமுகவினரையும், சிபிஐ இவ்வழக்கில் கைது செய்துள்ளது உறுதி செய்துள்ளது. எடப்பாடி அரசிடம் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்திருந்தால் இந்த கைதுகள் நடந்திருக்குமா ?என்று கேள்வி எழுப்பியுள்ளார்.