வெற்றிகளை குவிக்கும் திமுக வேட்பாளர்கள்… குஷியில் ஸ்டாலின்!

 

வெற்றிகளை குவிக்கும் திமுக வேட்பாளர்கள்… குஷியில் ஸ்டாலின்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே திமுக தான் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதே நிலை தான் இப்போதும். அதிமுக 80 இடங்களிலும் திமுக 153 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

வெற்றிகளை குவிக்கும் திமுக வேட்பாளர்கள்… குஷியில் ஸ்டாலின்!

அதிமுக தான் ஜெயிக்கும் என கணிக்கப்பட்டிருந்த இடங்களில் கூட திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கும் சூழலே தற்போது நிலவுகிறது. குறிப்பாக, அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் பலர் பின்னடைவை சந்தித்திருப்பது அதிமுக தலைமையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதிமுகவை வீழ்த்தி திமுக வேட்பாளர்கள் வெற்றி வாகையை சூடும் செய்திகளும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் ௭௦ ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சின்னப்பனை விட 37,893 கூடுதலாக பெற்று வெற்றி வாகையை சூடியுள்ளார்.

வெற்றிகளை குவிக்கும் திமுக வேட்பாளர்கள்… குஷியில் ஸ்டாலின்!

இதே போல, கீழ்வேளூர் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி வெற்றி பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை விட 16985 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகையை சூடியுள்ளார். குன்னூர் திமுக வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளார். இவ்வாறு திமுக வேட்பாளர்கள் வெற்றி மகுடத்தை சூடுவது திமுக தலைமை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.