“சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் திமுக தான் போட்டியிடும்” – ஆர். எஸ். பாரதி

 

“சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் திமுக தான் போட்டியிடும்” – ஆர். எஸ். பாரதி

வரும் சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் திமுக தான் போட்டியிடும் என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

“சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் திமுக தான் போட்டியிடும்” – ஆர். எஸ். பாரதி

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், திமுகவினர் அரசியலில் கண்ணியம் காக்க வேண்டும். நாகரிகமாக பேச வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ராயபுரம் தொகுதியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா? என்றும் சவால் விடுத்தார். ஏற்கனவே மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று குஷ்பூ, சீமான் உள்ளிட்டோர் கூறிய நிலையில் அமைச்சர் ஜெயக்குமாரும் ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார்.

“சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் திமுக தான் போட்டியிடும்” – ஆர். எஸ். பாரதி

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ‘ராயபுரம் தொகுதியில் சாதராண திமுக தொண்டரை நிறுத்தி அமைச்சர் ஜெயக்குமாரை தோற்கடிப்போம். காங்கிரஸுக்கு ஒதுக்கியதால் தான் ராயபுரம் தொகுதியில் திமுக தோல்வியடைந்தது. வரும் சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதியில் திமுக தான் போட்டியிடும்’ என்றார்.