“சட்டமன்ற தேர்தலுக்குள் திமுக உடையும்” – கோவையில் முதல்வர் பேச்சு!

 

“சட்டமன்ற தேர்தலுக்குள்  திமுக உடையும்” – கோவையில் முதல்வர் பேச்சு!

திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாததால் மக்கள் திமுகவை புறக்கணித்து விட்டனர் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

“சட்டமன்ற தேர்தலுக்குள்  திமுக உடையும்” – கோவையில் முதல்வர் பேச்சு!

சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிசாமி, நேற்று கோவை புளியங்குளம் பகுதியில் பரப்புரையை தொடங்கினார். அங்குள்ள முந்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் சிங்காநல்லூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து கோவை அன்னூரில் பரப்புரை செய்த முதல்வர் , வீடு இல்லாத ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். தமிழகத்தில் ஏழை என்ற சொல்லே எதிர்காலத்தில் இருக்காது; நீட் தேர்வை வைத்து திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது என்றார்.

“சட்டமன்ற தேர்தலுக்குள்  திமுக உடையும்” – கோவையில் முதல்வர் பேச்சு!

தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, “வாழை நாரிலிருந்து துணி, பிஸ்கட், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையை சுமார் 400 கோடி மதிப்பில் செயல்படுத்த உள்ளோம். இதன்மூலம் வாழை விவசாயிகள் பலன் அடைவர். திமுகவினர் தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்றியதாக சரித்திரமே கிடையாது. ஆனால் அதிமுகவின் தேர்தல் அறிக்கையானது அனைத்து மக்களும் நன்மை பெறக்கூடிய வகையில் இருக்கும். திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாததால் மக்கள் திமுகவை புறக்கணித்து விட்டனர். அதிமுக ஆட்சியை கலைப்பதற்காக ஸ்டாலின் எடுத்துள்ள அவதாரங்களை தவிடுபொடியாக்கி மீண்டும் அதிமுகவே ஆட்சியில் அமரும். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக உடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை “என்றார்