“தேர்தலுக்கு முன்பே திமுக உடையும்” – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

 

“தேர்தலுக்கு முன்பே திமுக உடையும்” – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

உட்கட்சியினரே திமுகவை வீழ்த்துவார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக குறித்த திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெத்துவேட்டு. ஊழல் காரணமாக தமிழகத்தில் கலைக்கப்பட்ட ஆட்சி தான் திமுக. தேர்தலுக்கு முன்பே திமுக பிளவுபடும். உட்கட்சியினரே திமுகவை வீழ்த்துவார்கள் என அதிரடியாக பேசினார்.

“தேர்தலுக்கு முன்பே திமுக உடையும்” – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

சென்னை ராஜ்பவனில் இன்று காலை தமிழக ஆளுநரை சந்தித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், அதிமுகவின் ஊழல் மற்றும் குறைகள் குறித்த 97 பக்க மனுவை கொடுத்தார். அதிமுக மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்திய ஸ்டாலின், சொத்துக்களை வாங்கிக் குவித்த முதல்வர் மற்றும் துணை முதல்வர் குறித்தும் அமைச்சர்கள் செய்த ஊழல் குறித்தும் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.